ஏப்.23ம் தேதி மாவட்டம் முழுவதும் விடுமுறை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

0
ஏப்.23ம் தேதி மாவட்டம் முழுவதும் விடுமுறை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மங்களதேவி கண்ணகி கோயிலின் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் முக்கிய உத்தரவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதிரடி உத்தரவு:

2000 ஆண்டுகள் பழமையான தமிழக – கேரளா பெரியார் புலிகள் சரணாலய பகுதியில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோவில் திருவிழா ஆண்டுதோறும் மிகவும் விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது. பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ள வனப்பகுதியில் இருக்கும் கோயிலில் திருவிழா சமயத்தில் மட்டும் மக்கள் சென்று வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு திருவிழாவிற்கான கொடியேற்ற பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று கண்ணகி கோயிலில் சித்ரா பௌர்ணமி முழு நிலவு விழா, மங்களதேவி கண்ணகி விழா, பூமாரி விழா என்ற முப்பெரும் விழாக்கள் நடைபெற உள்ளது.

TET தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு – மிஸ் பண்ணிராதீங்க || சூப்பர் வாய்ப்பு!

இதனை முன்னிட்டு பக்தர்கள் சென்று வர ஏதுவாக அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே ஏப்ரல் 23ஆம் தேதி தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனை ஈடு செய்யும் வகையில் பணி நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!