தமிழகத்தில் வருகிற மார்ச் 18 ஆம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை
தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. இந்நிலையில் இன்று (மார்ச் 12) முதல் மார்ச் 17 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதன் பின் மார்ச் 18 தேதி தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இன்சூரன்ஸ் கம்பெனி வேலைவாய்ப்பு 2024 – 100 காலிப்பணியிடங்கள் || சம்பளம்:ரூ.96765/-
மேலும் இன்று முதல் மார்ச் 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.