தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டத்தின் காரணமாக பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மாணவர் வருகை:
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயன் அடையும் வகையில் காலை உணவு திட்டத்தை அமல்படுத்தினார். காலை உணவு என்பது அன்றைய நாளுக்கான முழு சக்தியையும் வழங்கும் முக்கிய உணவு ஆதாரம். அரசு பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் காலை உணவை உண்ணாமல் பள்ளிக்கு வருவதாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை சரி செய்யும் வகையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது
மத்திய அரசின் MCL நிறுவனத்தில் வேலை – சம்பளம்: ரூ.2,90,000/- || விரைந்து விண்ணப்பியுங்கள்!
இந்நிலையில், மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் அவர்கள் காலை உணவு திட்டம் மூலம் பள்ளிக்கு வரும் மாணவர்களின் வருகையானது 90% அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் மாணவர்கள் முன்கூட்டியே பள்ளிக்கு வந்து விடுவதாகவும், காலை உணவை விரும்பி உண்பதாகவும், இந்த திட்டத்தின் மூலம் தாய்மார்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.