தமிழக போக்குவரத்து துறை ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றம் – அமைச்சர் உறுதியளிப்பு!
தமிழக போக்குவரத்து பணியாளர்களின் கோரிக்கைகள் ஊதிய ஒப்பந்தத்தில் இறுதி செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் பணியாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.
போக்குவரத்து துறை:
தமிழக அரசு ஊழியர்கள் நீண்ட காலமாகவே அகவிலைப்படி உயர்வு அளிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு அதிகரித்து வரும் விலைவாசியை கருத்தில் கொண்டு வாக்குறுதி அளித்தபடி கடந்த ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31% ஆக உயர்த்தியது. இதனால் ஏராளமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் ஊதிய உயர்வு வேண்டி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – மத்திய ரயில்வே அமைச்சர் அறிவிப்பு!
இந்த நிலையில் கடந்த வாரம் 4ம் கட்ட ஊதிய உயர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் 1.9.2019 லிருந்து 2 சதவீத உயர்வும், 01.01.2022 லிருந்து அடுத்தக்கட்டமாக 3 சதவீதம் உயர்வும் சேர்த்து மொத்தமாக 5 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் வாக்குறுதி அளித்தார். அதனை தொடர்ந்து தற்போது அதிக நாள்கள் பணிக்கு வராத பணியாளர்களுடன், போக்குவரத்துத்துறை அமைச்சர் கலந்துரையாடினார். பணியாளர்களின் கோரிக்கைகள் ஊதிய ஒப்பந்தத்தில் இறுதி செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
Exams Daily Mobile App Download
மேலும் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளிடமும் அன்பாகவும், கனிவாகவும் நடந்து கொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் நீங்கள் அனைவரும் முழுமையாக பணிக்கு வந்து, அனைத்து பேருந்துகளையும் இயக்கிட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். நீங்கள் தற்பொழுது எடுக்கும் விடுப்பானது ஓய்வு பெறும் காலத்தில் உங்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார். கலந்தாலோசனையை தொடர்ந்து அடையார் பணிமனையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேருந்தினை பார்வையிட்டார்.