தமிழகத்தில் ‘இவர்களுக்கு’ ஒரே சம்பளம் – ஆட்சியர்களுக்கு உத்தரவு!
தமிழகத்தில் சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் துாய்மை பாரத இயக்கம் இரண்டாம் கட்டம் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சம்பளம் குறித்து ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் வெளி இடங்களில் மலம் கழிப்பதை தடுக்க 2014 ஆம் ஆண்டு துாய்மை பாரத இயக்கம் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியது. இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டம் அனைத்து ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் சென்னையை தவிர அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் பொன்னையா கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.
Join Our WhatsApp Group” for Latest Updates
அதில் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் ஒருங்கிணைப்பாளர்கள் நியாக்கப்பட்டு உள்ளனர். மேலும் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் ஏற்றத்தாழ்வு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் அனைவருக்கும் ஒரே மாதிரி சம்பளம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் பணவீக்கம் – பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்கள்!
மேலும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாதம் ரூ. 35,000 ரூபாய் சம்பளமும், வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாதம் ரூ.25,000 சம்பளம் வழங்க வேண்டும். இந்த புது நடைமுறை செப் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மறு உத்தரவு வரும் வரை இதில் எந்த மாற்றமும் இருக்க கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.