தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு நேர மாற்றம் – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வருவதால் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் அளிக்கப்பட்டு மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு நேர மாற்றத்தை அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
கடைகள் நேர மாற்றம்:
தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலை பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மே 10ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. கடந்த மாதம் தினசரி 35 ஆயிரம் வரை பதிவு செய்யப்பட்டு வந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 3 ஆயிரமாக குறைந்து உள்ளது. இதனையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதன்படி ஜூன் 14ம் தேதி முதல் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டன.
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு – நாளை முதல் அமல்!
முதற்கட்டமாக கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் மட்டும் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. தினசரி காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை கடைகள் செயல்பட்டு வந்தன. ஊரடங்கிற்கு முன்னர் தினசரி டாஸ்மாக் கடைகள் பிற்பகல் 12 மணிமுதல் இரவு 10 மணிவரை செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஊரடங்கில் வழங்கப்பட்ட படிப்படியான தளர்வுகள் காரணமாக மாநிலம் முழுவதும் காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை கடைகள் செயல்பட்டு வருகின்றன.
யுவா-ப்ரீத்தி கல்யாணம் நடைபெறுமா? விறுவிறுப்படையும் ‘கண்ணான கண்ணே’ தொடர்!
மேலும் ஜூலை 12ம் தேதி முதல் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. தற்போது காலை 10 மணிமுதலே கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால், காலையிலேயே குடிமகன்கள் மதுபானம் குடித்து விட்டு ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் பழைய முறைப்படி தினசரி பிற்பகல் 12 மணிமுதல் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க உத்தரவிட வேண்டும், நேர மாற்றத்தை அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் ஜூலை 19ம் தேதி வரை மதுபான கூடங்களை திறக்க அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.