தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு – நாளை முதல் அமல்!

0
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு - நாளை முதல் அமல்!
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு - நாளை முதல் அமல்!
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு – நாளை முதல் அமல்!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து கொண்டே வரும் நிலையில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு உத்தரவு மேலும் ஒரு வார காலம் (ஜூலை 19 வரை) நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வழங்கப்பட்டு உள்ள தளர்வுகள் நாளை முதல் அமலுக்கு வர உள்ளன.

ஊரடங்கு நீட்டிப்பு:

தமிழகத்தில் கொரோனா 2வது அலை பாதிப்பு அதிகரித்த காரணத்தால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அரசு மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசிகளின் பலனாக தற்போது தினசரி தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இதன் அடிப்படையில் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஜூலை 5ம் தேதி நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் அளிக்கப்பட்டன.

EPFO பயனர்கள் கவனத்திற்கு – அவசர காலத்தில் பணம் எடுப்பதற்கான காரணங்கள்!

அதன்படி மாநிலம் முழுவதும் பேருந்து பொது போக்குவரத்து சேவைகள் தொடங்கி உள்ளன. ஜவுளி, நகை கடைகள் குளிர்சாதன வசதியின்றி செயல்படுகின்றன. இரவு 8 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் இ-பாஸ் இன்றி பயணிக்க அரசு அனுமதி அளித்தது. ஹோட்டல்கள், டீக்கடைகளில் 50% வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ண அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 5 பெரிய மாற்றங்கள்!

மேலும் தினசரி கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதனால் அரசு ஊரடங்கை மேலும் தளர்த்த முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் ஜூலை 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் மற்றும் மதுபான கூடங்கள் திறக்க தொடர்ந்து தடை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிற மாநிலங்களுக்கு பேருந்து சேவைகளுக்கான தடை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், புதுச்சேரிக்கு மட்டும் பேருந்துகள் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

மேலும் இரவு 9 மணிவரை கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஒன்றிய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான போட்டித் தேர்வுகளை நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது. உரிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் தேர்வுகளை நடத்தலாம் என அரசு தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!