தமிழக மாணவர்களின் தேர்வு மதிப்பெண்கள் இணையத்தில் பதிவு – புதிய வசதி அறிமுகம்!
தமிழகத்தில் EMIS தளத்தில் பள்ளி மாணவர்களின் முழு விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு மதிப்பெண்களையும் பதிவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
EMIS தளம்
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கம் போல் பள்ளிகள் செயல்படத் தொடங்கியுள்ளது. மேலும் நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக கொரோனா காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை சரி செய்ய 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு “எண்ணும் எழுத்தும்” என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் புள்ளி விவரத்தை குறிக்கும் EMIS தளத்தில் புதிய வசதி ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது ஏற்கனவே இத்தளத்தை பயன்படுத்தி பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரின் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் கல்வித்துறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி கல்விக்காக மட்டுமே செலவழிக்கபடுகிறதா என்பதையும் பற்றி இந்த தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த தளத்தில் ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு EMIS எண் வழங்கப்படுகிறது. இந்த எண் அந்த மாணவனுக்கான தனித்துவமான அடையாளமாக கருதப்படுகிறது. மேலும் ஒரு மாணவர் எந்த பள்ளியில் மாறி படித்துள்ளான் என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு – மாணவர்களுக்கு 1500 ரூபாய் வரை உதவித்தொகை
இந்த நிலையில் இந்த EMIS தளத்தில் மற்றொரு புதிய வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி இந்த தளத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களின் முழு ஆண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, காலாண்டு தேர்வு உள்ளிட்ட தேர்வுகளின் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் 8ம் வகுப்பு மாணவர்களின் முழு ஆண்டு தேர்வு மதிப்பெண்களை கட்டாயமாக நிரப்ப வேண்டும் என்று அனைத்து பள்ளிகளிலும் பணிபுரியும் 8ம் வகுப்பு ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.