தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு – மாணவர்களுக்கு 1500 ரூபாய் வரை உதவித்தொகை!

0
தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு - மாணவர்களுக்கு 1500 ரூபாய் வரை உதவித்தொகை!
தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு - மாணவர்களுக்கு 1500 ரூபாய் வரை உதவித்தொகை!
தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு – மாணவர்களுக்கு 1500 ரூபாய் வரை உதவித்தொகை!

தமிழ் மொழித்திறனை மேம்படுத்தும் வகையில் நடப்பு ஆண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேர்வு குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.

இலக்கியத் திறனறித்தேர்வு:

தமிழகத்தில் கொரோனா தாக்குதலுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து வழக்கம் போல பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்த நேரத்தில் அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது 1 – 3ம் வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன் மாணவர்களிடம் வாசிப்பு திறனை மேம்படுத்த ரீடிங் மாரத்தான் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற பல திட்டங்கள் செயல்பாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தற்போது மாணவர்களிடம் தமிழ்மொழி அறிவை மேம்படுத்தும் வகையில் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத்தேர்வை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த ஆண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறிவு தேர்வு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகையான பள்ளிகளில் பயிலும் 11ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே இத்தேர்வை எழுத முடியும். இத்தேர்வுக்கு மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் இதற்கான விண்ணப்பங்களை dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

EPFO கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு – UAN எண்ணை உருவாக்குவது எப்படி

அத்துடன் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதனுடன் தேர்வு கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை செப்டம்பர் மாதம் 9ம் தேதிக்குள் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். இத்தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500 வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வானது 10ம் வகுப்பு தமிழ் பாடத் திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் நடைபெறும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!