தமிழகத்தில் 28 மாவட்டங்களில் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – எந்தெந்த மாவட்டங்கள்! முழு விவரம்!
தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், 28 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ( நவ 11) விடுமுறை விடப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின் படி, வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டி தற்போது நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கனமழை எச்சரிக்கை காரணமாக 28 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று (நவம்பர் 11) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், மதுரை, தேனி மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாகஅந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
வர்ஷினி பேச்சால் கடுப்பான எழில்.. அமிர்தாவை எச்சரிக்கும் பெற்றோர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
மேலும் தருமபுரி, திண்டுக்கல், சிவகங்கை, கரூர் மற்றும் நாமக்கல்லில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை மட்டும் மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.