வர்ஷினி பேச்சால் கடுப்பான எழில்.. அமிர்தாவை எச்சரிக்கும் பெற்றோர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
வர்ஷினி பேச்சால் கடுப்பான எழில்.. அமிர்தாவை எச்சரிக்கும் பெற்றோர் - இன்றைய
வர்ஷினி பேச்சால் கடுப்பான எழில்.. அமிர்தாவை எச்சரிக்கும் பெற்றோர் - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
வர்ஷினி பேச்சால் கடுப்பான எழில்.. அமிர்தாவை எச்சரிக்கும் பெற்றோர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி”சீரியலில், இனியா ஸ்கூலில் மொபைல் போன் பயன்படுத்த அதை பார்த்த டீச்சர் நாளை பெற்றோர்களை வர சொல்கிறார். மறுபக்கம் வர்ஷினி எழில் குடும்பத்துடன் நெருங்கி பழக அது எழிலிற்கு பிடிக்காமல் இருக்கிறது. பின் அமிர்தாவின் அம்மா அப்பா எழிலிடம் பழக வேண்டாம் என எச்சரிக்கின்றனர்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா ஸ்கூலில் நண்பர்களுடன் அமர்ந்திருக்க அப்போது தோழி ஒருவர் வந்து நான் போன் வைத்திருப்பதாக சொல்கிறார். உடனே இனியா ஸ்கூலிற்கு போன் கொண்டு வர கூடாது என சொல்ல, ஆனால் அவர் நாம போட்டோ எடுப்போம் என சொல்கிறாள். உடனே எல்லாரும் சேர்ந்து போட்டோ எடுக்கின்றனர். அப்போது இனியா கையில் போன் இருக்க டீச்சர் வந்து பார்த்து தலைமை ஆசிரியரை வர சொல்கிறார். அவர் வந்து பார்க்க இனியா கையில் போன் இருக்கிறது. உடனே போனை வாங்கி கொண்டு ஸ்கூலிற்கு போன் கொண்டு வர கூடாது என தெரியாதா என கேட்கிறார். பின் நாளைக்கு உங்களுடைய பெற்றோர் வர வேண்டும், டீசி கொடுக்கப்படும் என தலைமை ஆசிரியர் சொல்கிறார்.

இனியா அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். மறுபக்கம் எழில் அலுவலகத்தில் இருக்க வர்ஷினி வருகிறார். வர்ஷினி நான் நேற்று உங்க வீட்டிற்கு போனதாக சொல்ல, உடனே எழில் எதற்கு நான் இல்லாத போது போறீங்க என கேட்கிறார். அதற்கு வர்ஷினி எனக்கு உங்களை பிடித்திருப்பதாக சொல்கிறார். எழில் நான் அமிர்தாவை காதலிப்பதாக சொல்ல, அதற்கு உங்க வீட்டில் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அதனால் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா என பார்க்க போனதாக சொல்ல, எழில் அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். பின் சதீஸிடம் அவர் கோவப்பட்டு பேச ஆனால் சதீஸ் படம் முடியும் வரை அமைதியாக இருக்க சொல்கிறார்.

மறுபக்கம், செழியன் வீட்டிற்கு வர கோபி அவரை ரோட்டில் சந்திக்கிறார். அப்போது ஜெனி எப்படி இருக்கிறாள் மருத்துவமனைக்கு கூட்டிக் கொண்டு போ என சொல்கிறார். முதல் முறை அப்படி ஆனதால் இந்த முறை சரியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என கோபி சொல்கிறார். பின் ஜெனிக்கு பழங்களை வாங்கி கொடுக்க செழியன் வேண்டாம் என சொல்கிறார். வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லாதே என சொல்கிறார். செழியன் சரி என சொல்ல, எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. நான் அலுவலகத்தில் எல்லாரிடமும் சொல்லிவிட்டேன் என சொல்கிறார்.

மும்பையில் நிலவும் பயங்கரவாத அச்சுறுத்தல் – 30 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை!

பின் அமிர்தா வர்ஷினி சொல்வதை நினைத்து வருத்தப்படுகிறார். அவர் ஒரே குழப்பத்தில் இருக்க அப்போது எழில் போன் செய்கிறார். அமிர்தா போனை எடுத்து சரியாக பேசாமல் இருக்க, அப்போது அமிர்தாவின் அப்பா அம்மா வருகின்றனர். அவர்கள் போனை வாங்கி இனிமேல் நீ எழிலிடம் பழகாதே என சொல்கிறார். வர்ஷினி பேசியதற்கு எழிலை நம்பாமல் இருக்க முடியாது என சொல்ல, உடனே அமிர்தா அப்பா அம்மா அவன் உனக்கு என இருந்தால் நடக்கும் அதற்கு அவன் தான் எதாவது செய்ய வேண்டும் என அமிர்தாவின் அப்பா சொல்கிறார். அதை கேட்டு அமிர்தா வருத்தப்படுகிறார். பின் இனியா ஸ்கூல் விட்டு வர ஏன் முகம் வாடி இருக்கிறது என ஈஸ்வரியும் பாக்கியாவும் கேட்கின்றனர். அப்போது இனியா மிஸ் திட்டியதாகவும் நாளைக்கு உன்னை வர சொன்னதாக சொல்கிறாள், இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!