தமிழக பள்ளிகளில் ஏப்ரல் 20 கடைசி வேலை நாள் – கல்வித்துறைக்கு கோரிக்கை!!

1
தமிழக பள்ளிகளில் ஏப்ரல் 20 கடைசி வேலை நாள் - கல்வித்துறைக்கு கோரிக்கை!!
தமிழக பள்ளிகளில் ஏப்ரல் 20 கடைசி வேலை நாள் - கல்வித்துறைக்கு கோரிக்கை!!
தமிழக பள்ளிகளில் ஏப்ரல் 20 கடைசி வேலை நாள் – கல்வித்துறைக்கு கோரிக்கை!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்த கல்வியாண்டிற்கான கடைசி வேலை நாளாக ஏப்ரல் 20ம் தேதியை அறிவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகள் வேலை நாள்:

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் அவர்களுக்கு மட்டும் நேரடி முறையில் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை பணிகளை தொடங்குவதற்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வருகை புரிய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. இதற்கிடையில் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தினசரி புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அரசு உத்தரவு!!

இதனால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை ஒத்திவைத்து நேரடி வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் என ஏற்கனவே ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. எனவே பொதுத்தேர்வினை நடத்துவது குறித்து நேற்று தலைமை செயலாளர் ஆலோசனையில் ஈடுபட்டார். அதற்கான முடிவுகள் தற்போது வரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் சங்க தலைவர் சார்பில், பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. தினசரி 7000க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுகிறது. ஆசிரியர்களும் தினமும் பயத்துடன் பேருந்துகளில் பயணித்து பள்ளிகளுக்கு வருகை புரிகின்றனர். பள்ளிகளில் மாணவர்கள் இல்லாத சூழ்நிலையிலும் ஆசிரியர்கள் வந்து செல்கின்றனர். இதனால் மிகுந்த மன உளைச்சல் ஏற்படுகிறது. எனவே ஆசிரியர்களின் குடும்பங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு? தலைமை செயலர் முக்கிய ஆலோசனை!

இதனை தடுக்க வரும் ஏப்ரல் 20ம் தேதியை நடப்பு கல்வியாண்டில் கடைசி வேலை நாளாக அறிவிக்க வேண்டும். மேலும் CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை மத்திய அரசு ஒத்திவைத்ததை போன்று, தமிழகத்திலும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வினை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!