தமிழகத்தில் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் ‘ஆல் பாஸ்’ ஏன்? முதல்வர் விளக்கம்!!
தமிழகத்தில் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்த நிலையில் அதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கான அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில் ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளும் தொடங்கப்பட்டன.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் இன்றி தேர்ச்சி வழங்கப்படும் என தமிழக அரசு இன்று தெரிவித்துள்ளது. இது குறித்து சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அறிவித்த விளக்கம், “கொரோனா காரணமாக 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு கற்றல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பிப்., 26 ஆம் தேதி “பாரத் பந்த்” – CAIT அறிவிப்பு!!
இதனால் பள்ளியில் பாடங்களை முடிக்க போதிய கால அவகாசமும் இல்லை. இதற்காக அரசு சார்பில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. இருந்த போதிலும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்று தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக” அவர் தெரிவித்தார்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு வயது வரம்பு – தமிழக அரசுக்கு உத்தரவு!!
மேலும் கடந்த கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு தேர்வுகள் இன்றி தேர்ச்சி வழங்கப்பட்டாலும் காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகை பதிவு போன்றவற்றின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அவை அனைத்தும் நடத்தப்படாததால் எவ்வாறு தேர்வு மதிப்பெண் கணக்கிடப்படும் என்பது குறித்த அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்