தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!
இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை (ஜனவரி 27) தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை
இந்த ஆண்டு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. மழை பாதிப்பு சற்று ஓய்ந்துள்ள நிலையில் பல மாவட்டங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலில் கிழக்கு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை ஜனவரி 27 தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த 6 பேருக்கு பத்ம விருதுகள் – மொத்தம் 106 பேர் தேர்வு!!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு வடமேற்கு திசையில் மெதுவாக நகரும் என்பதால், இன்று (ஜன 26) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அங்கே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.