தமிழகத்தை சேர்ந்த 6 பேருக்கு பத்ம விருதுகள் – மொத்தம் 106 பேர் தேர்வு!!
தமிழகத்தை சேர்ந்த பின்னணிப் பாடகி உட்பட 6 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்ந்து சுமார் 100 பேர் இந்த விருதினை பெற உள்ளனர்.
பத்ம விருதுகள்
மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் மிக உயரிய விருதான பத்ம விருதுகளை வென்றவர்களின் பட்டியலை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வணிகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு மற்றும் சிவில் சேவை ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுகள் ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் விழாக்களில் இந்திய குடியரசுத் தலைவரால் வழங்கப்படும்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை தகவல்!!
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில், 2023 ஆம் ஆண்டிற்கான 106 பத்ம விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருது பெற்றவர்களில் 19 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த பின்னணிப் பாடகி வாணி ஜெய்ராம், கலைத்துறைக்கான பத்ம பூஷன் விருதை வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், ஸ்ரீ வடிவேல் கோபால் & ஸ்ரீ மாசி சடையன், ஸ்ரீ பாலம் கல்யாண சுந்தரம் ஆகியோர் சமூகப்பணிக்கான பத்மஸ்ரீ விருதையும், டாக்டர் கோபால்சாமி வேலுச்சாமி மருத்துவப் பிரிவிற்கான பத்மஸ்ரீ விருதையும் பெற உள்ளனர்.