தமிழக அரசின் பொங்கல் தொகுப்பில் குளறுபடி? புகார் எண் வெளியீடு!
தமிழகத்தில் நேற்று (ஜன. 10) முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்பட்டு வரும் நிலையில், அது குறித்த புகார்களுக்கு இலவச எண் வழங்கப்பட்டுள்ளது.
இலவச எண்
தமிழகத்தில் இன்னும் 3 நாட்களில் பொங்கல் பண்டிகை வர இருக்கிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரேஷன் கடைகளில் இதற்கான டோக்கன் வழங்கப்பட்டு, நேற்று (ஜன. 10) முதல் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களுடைய டோக்கனில் குறித்துள்ள தேதியில் சென்று பொங்கல் பரிசை வாங்கி கொள்ளலாம். இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஏதேனும் குளறுபடி செய்தால், ரேஷன் கார்டுதாரர்கள் 1967 மற்றும் 18004255901 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Join Our WhatsApp Channel ” for Latest Updates
தமிழ்நாடு அரசு அச்சுத் துறை வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.71,900/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!