தமிழக காவல்துறையில் முதியோருக்கு சிறப்பு பிரிவு – அரசு மீது புகார்!

0
தமிழக காவல்துறையில் முதியோருக்கு சிறப்பு பிரிவு - அரசு மீது புகார்!
தமிழக காவல்துறையில் முதியோருக்கு சிறப்பு பிரிவு - அரசு மீது புகார்!
தமிழக காவல்துறையில் முதியோருக்கு சிறப்பு பிரிவு – அரசு மீது புகார்!

தமிழகத்தில் தனியாக இருக்கும் முதியவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் காவல்துறையில் புதிதாக முதியோர் பாதுகாப்பு பிரிவு துவங்குவதால் அவசியம் குறித்து பரிந்துரை செய்யப்படும், அரசு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

காவல்துறை குற்றசாட்டு

தமிழகத்தில் பல இடங்களில் தனியாக இருக்கும் முதியவர்களை தாக்கி நகை பணம் கொள்ளை அடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. மேலும் காவல்துறை முதியவர்களை பாதுகாப்பதில் மெத்தனம் காட்டுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து போலீஸ்அதிகாரிகள் கூறுகையில் தனியாக வசிக்கும் முதியவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி இருப்பதாகவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ‛தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு தடை – காட்சிகளை ரத்து செய்த மல்டிப்பிளக்ஸ் திரையரங்குகள்!

ஆனால் முதியவர்களை போலீஸ் சந்திக்க முடியாத சூழ்நிலை இருப்பதால் சென்னை மாநகர காவல் துறையில், புதிதாக முதியோர் பாதுகாப்பு பிரிவு துவங்க, அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது. அதன் படி முதியோருக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு உதவிகள் அதற்கு தேவையான விவரங்கள் குறித்து போலீசார் அனைத்து விவரங்களையும் அரசிடம் சமர்ப்பித்துள்ளனர்.

மேலும் இந்த புது பிரிவு முதன்முறையாக சென்னையிலும், அதனை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் செய்யப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அரசு இதற்கு இன்னும் ஒப்புதல் வழங்காமல் இருக்கிறது. இது குறித்து அரசு தரப்பில் கூறுகையில் இது காவல்த்துறை மட்டுமல்லாமல் சமூக நலத் துறையும், சுகாதாரத் துறையும் இணைந்து செய்தால் சரியாக இருக்கும் என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!