தமிழகத்தில் 490வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை – நிம்மதியில் வாகன ஓட்டிகள்!
தமிழகத்தில் 490வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் இன்றைய விலை எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம்.
விலை நிலவரம்:
மக்களுக்கு அன்றாட வாழ்க்கையில் முக்கிய பொருளாக பெட்ரோல் மாறிவிட்டது. அதனால் அதன் விலை எவ்வளவு விற்றாலும் மக்கள் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது. அதனால் வாகன ஓட்டிகள் நிம்மதியில் இருக்கின்றனர்.
தமிழகத்தில் கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் – அரசிடம் வலுக்கும் கோரிக்கை!
அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதத்தில் தமிழகத்தில் 490வது நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன் படி இன்று (செப்.23) பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.102.63 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ. 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையானது தமிழகம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.