தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது – முழுஅடைப்பு போராட்டத்தில் விவசாயிகள்!

0
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது - முழுஅடைப்பு போராட்டத்தில் விவசாயிகள்!
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது - முழுஅடைப்பு போராட்டத்தில் விவசாயிகள்!
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது – முழுஅடைப்பு போராட்டத்தில் விவசாயிகள்!

தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது என்பதை வலியுறுத்தி கர்நாடகாவில் விவசாயிகள் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

காவிரி:

கர்நாடகா மாநிலத்தில் அதிக வறட்சி நிலவி வருவதால் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது என அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், கர்நாடகா அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, மண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர், ராமநகர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்க முடியாது என்பதை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் 490வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை – நிம்மதியில் வாகன ஓட்டிகள்!

இந்நிலையில், தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது என்பதை வலியுறுத்தி நேற்று மண்டியாவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர், இன்று கர்நாடகாவின் மண்டியா நகரில் விவசாயிகள் முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். மேலும், விவசாயிகள் அனைவரும் இந்த முழுஅடைப்பு போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மாவட்ட விவசாயிகள் நல சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!