பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் – தமிழக அரசு எச்சரிக்கை!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் பொது இடங்களில் கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
கொரோனா கட்டுப்பாடு விதிகள்:
தமிழகத்தில் கொரோனா காரணமாக மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் கொரோனா தாக்கம் குறைந்து வரும் காரணமாக படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு தளர்வுகள் வழங்கப்பட்டது. இருந்த போதிலும் மக்கள் கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்ற வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
TN Job “FB Group” Join Now
தற்போது நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டில் உள்ள 6 மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழக தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் தலைமையிலான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு வழக்கு – உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!!
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த தலைமை செயலாளர் கூறுகையில், “தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரபடுத்தப்பட வேண்டும். கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட வேண்டும். மாவட்டம் தோறும் காய்ச்சல் முகாம்கள் நடத்தி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து சிகிச்சை வழங்கப்பட வேண்டும்.
முகக்கவசம் அணியாவிடில் ரூ.200 அபராதம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
பொது இடங்களில் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும். மேலும் கூட்ட நெரிசல் சேராமல் பார்த்து கொள்ள வேண்டும். கட்டாயம் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும், கைகளை குறிப்பிட்ட இடைவெளியில் கழுவ வேண்டும். கொரோனா தடுப்பூசி தேவைப்படுவர்களை கண்டறிந்து தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.