முகக்கவசம் அணியாவிடில் ரூ.200 அபராதம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
கொரோனா தாக்கம்:
கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று, ஒரு சில மாதங்களில் உலகின் அனைத்து பகுதிக்கும் பரவியது. கடந்த ஆண்டில் கொரோனா தொற்றின் தாக்கத்தினால் பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவத் தொடங்கியுள்ளது. இரண்டாம் அலையில் பரவும் தொற்றானது உருமாறிய பரிணாம வளர்ச்சியடைந்த வைரஸாக கருதப்படுகிறது.
‘பச்சாத் பிளஸ்’ புதிய பாலிசி – எல்ஐசி நிறுவனம் அறிவிப்பு!!
ஆலோசனை:
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை பாதிப்புகள் ஆரம்ப நிலையில் உள்ளது. இதனால் ஒரு நாளில் தமிழகத்தில் 800க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
அபராதம்:
ஆலோசனைக்கு பின்னர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் இனி முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதமும், தனி மனித இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு ரூ.5,000 அபராதமும் விதிக்கப்படும் என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மஹேஸ்வரி அறிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்