தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு வழக்கு – உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு!!
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் 69% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இடஒதுக்கீடு வழக்கு:
நாடு முழுவதும் 1992 ஆம் ஆண்டு 50 சதவிகிதத்திற்கு அதிகமான இடஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்து சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இதுகுறித்து தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் மற்ற மாநிலங்கள் பிரதமரின் அனுமதியுடன் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்தி உள்ளதால் அதில் தலையிட அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் அசோக் பூஷண் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது.
மத்திய அரசு நிறுவனங்களில் காலிப்பணியிடங்கள் – கல்வி அமைச்சர் வெளியீடு!!
இந்த வழக்கு அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்பதால் அனைத்து மாநிலங்களும் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் 1992 ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமா? அல்லது 50 சதவிகித முறையே தொடரலாமா? என தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.