தமிழக அரசு துறைகளில் உள்ள லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசு துறைகளில் இருக்கும் லட்சக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் பல துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை தகுதித் தேர்வின் அடிப்படையில் நிரப்பி வருகின்றன. அதாவது டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 முதலான தகுதி தேர்வுகளை நடத்தி தகுதியான தேர்வாளர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுமே தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக தகுதி தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. இதனால், அரசு பணியில் காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே இருந்தன.
10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை – 96 காலிப்பணியிடங்கள்.. !
தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவுக்கு குறைந்துள்ள காரணத்தினால் இந்த ஆண்டு தகுதி தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. குரூப் 2 தேர்விற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் வெளியானது மற்றும் மே 21 ஆம் தேதி குரூப் 2 தகுதித் தேர்வு நடைபெற இருக்கிறது. குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு மார்ச் இறுதியில் வெளியானது மற்றும் ஜூன் 24 ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தகுதி தேர்விற்கான அறிவிப்பு வெளியான நிலையில் பல லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் நாளை (ஏப்ரல் 20) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்நிலையில், அரசுப்பணியாளர் துறையில் உள்ள சீர்திருத்தங்களை மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழு, 6 மாதங்களில் அறிக்கையை தெரிவிக்க வேண்டும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். அரசு பணியில் உள்ள தேவையற்ற பணியிடங்கள் நீக்கப்பட்டு புதிய பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். மேலும், தமிழக அரசில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பனி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது எனவும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.