திருவாரூர் மாவட்டத்தில் நாளை (ஏப்ரல் 20) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை(ஏப்ரல் 20) அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்பட இருப்பதாக மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாதம்தோறும் மின் கசிவு மற்றும் மின் கோளாறு காரணமாக சாலைகளிலும் ஒரு சில இடங்களில் எக்கச்சக்கமாக விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. மேலும் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் பிளவு காரணமாக விபத்துகள் ஏற்படுகிறது. அதனால் தமிழக அரசு மின் வாரியத்தின் சார்பில் இவ்வாறு விபத்துகள் நடைபெறாமல் கண்காணித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழக அரசு மின் பராமரிப்பு பணிகளை முறையாக மாதந்தோறும் செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மின் வாரியம் சார்பில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை – 96 காலிப்பணியிடங்கள்.. !
இந்த நிலையில் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில் இருக்கும் துணை மின் நிலையத்தில் நாளை (ஏப்ரல் 20) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் சார்பில் கூறப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள், நீடாமங்கலம், ஒளிமதி, ரிஷியூர், கானுர், பச்சைகுளம், மாணிக்கமங்கலம், கொட்டையூர், பயத்தசேரி ஆகிய இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனால் இந்த ஊர்களில் வசிக்கும் மக்கள் முன்னரே தங்களின் அன்றாட வேலைகளை முடித்து கொள்ளுமாறும் கூறியுள்ளனர்.