தமிழக அரசின் சுதந்திர தினவிழா விருது – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் சுதந்திர தினவிழா விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வருகிற ஜூன் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்.
சுதந்திர தினவிழா விருது:
இந்தியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அன்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சிறப்பான தினத்தில் தமிழக அரசு பல துறைகளில் சேவை செய்பவர்களுக்கு விருது வழங்கி அவர்களை கவுரவித்து வரும். மேலும் விருது பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை, விருதுக்கான சான்று போன்றவையும் வழங்கப்படும். இது போன்ற விருதுகள் சமூக சேவை செய்பவர்களை ஊக்குவிப்பதாக உள்ளது.
தமிழக அரசின் இரண்டு பெண் குழந்தைகளுக்கான சலுகை – எப்படி விண்ணப்பிப்பது?
இந்நிலையில் இந்த வருடத்திற்கான சுதந்திர தினவிழாவுக்கு இன்னும் ஒரு மாத காலம் மட்டும் இருக்கும் நிலையில் அதற்கான பணிகளை தற்போது தமிழக அரசு செய்து வருகிறது. அதன்படி தமிழக அரசின் சுதந்திர தினவிழா விருதுக்கு வருகிற ஜூன் 28க்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அவர்கள் தெரிவித்தார். தற்போது இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது, இந்திய சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பல்வேறு தரப்பினருக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.
2 குழந்தைகள் பெற்றிருப்பவர்களுக்கு மட்டுமே அரசு வேலை – மாநில அரசு தகவல்!
இதில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சமூக நலன் சார்ந்து, பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலும், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்த சமூக சேவகர் மற்றும் சமூக நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். சேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருக்க வேண்டும். மேலும் இந்த விருதுக்கு வருகிற 28ம் தேதிக்குள் கரூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நபர்கள் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் வளாகம், கரூர் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று தெரிவித்தார்.
Two children female age 14. 11 possible
Two children female age 14. 11 benefit possible