தமிழக பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு – முதல்வர் முக்கிய ஆலோசனை!
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கு கணக்கீடு முறை குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
பிளஸ் 2 மதிப்பெண்:
இந்தியாவில் நிலவும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உத்தரவிட்டார். இதையடுத்து தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கு 12ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 40%, 10 மற்றும் 11ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 30% மதிப்பெண்கள் என கணக்கிட்டு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் வேலை – தேர்வு கிடையாது | ஊதியம் ரூ.2 லட்சம்
இந்த முறைக்கு கடந்த ஜூன் 17ம் தேதி அன்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதே நேரத்தில் ஜூலை 31ம் தேதிக்குள் பிளஸ் 2 மாணவர்களுக்கு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்றும் 10 நாட்களுக்குள் மதிப்பெண் கணக்கீட்டு முறை குறித்த இறுதி முடிவை உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழக பிளஸ் 2 மாணவர்களின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களை சரிபார்த்து அதை தேர்வுத்துறை இணையத்தில் ஜூன் 30ம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் என்று மேல்நிலை தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
2 குழந்தைகள் பெற்றிருப்பவர்களுக்கு மட்டுமே அரசு வேலை – மாநில அரசு தகவல்!
இந்நிலையில் தமிழக பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு முறை குறித்தும், கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாகவும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் இதற்கான முக்கிய முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.