2 குழந்தைகள் பெற்றிருப்பவர்களுக்கு மட்டுமே அரசு வேலை – மாநில அரசு தகவல்!

0
2 குழந்தைகள் பெற்றிருப்பவர்களுக்கு மட்டுமே அரசு வேலை - மாநில அரசு தகவல்!
2 குழந்தைகள் பெற்றிருப்பவர்களுக்கு மட்டுமே அரசு வேலை - மாநில அரசு தகவல்!
2 குழந்தைகள் பெற்றிருப்பவர்களுக்கு மட்டுமே அரசு வேலை – மாநில அரசு தகவல்!

அசாம் மாநிலத்தில் அரசு வேலை மற்றும் அரசு தரும் உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு, ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும் என அரசு அறிவித்து அதற்கான மசோதாவும் நிறைவேற்றப்பட உள்ளது.

அரசு வேலை

ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகளை பெற்றிருப்பவர்களுக்கு மட்டுமே அரசு வேலை மற்றும் அரசு தரும் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அசாம் அரசு தெரிவித்துள்ளது. அதாவது இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்கும் வகையில், அசாம் அரசு சில செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளது. அந்த வகையில், ஒரு குடும்பத்தில் 2 குழந்தைகள் இருந்தால் மட்டுமே அரசு தரும் சலுகைகளை அனுபவிக்க முடியும்.

தமிழகத்தில் பேருந்துகள் இயக்கம் முதல் ஜவுளிக்கடை திறப்பு வரை – 6ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள்?

முன்னதாக முடிவு அசாம் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் போது இது குறித்த கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும் அரசு வேலை, அரசு சலுகை குறித்த மசோதாவானது அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும் என அசாம் மாநில அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் இரண்டு பெண் குழந்தைகளுக்கான சலுகை – எப்படி விண்ணப்பிப்பது?

முன்னதாக வங்கதேசத்தில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில் அசாம் அரசு இந்த முடிவை அறிவித்துள்ளதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்தது, மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தேயிலை தோட்டங்களில் இருக்கும் அசாம் மாநில பழங்குடி மக்களுக்கு இவை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!