தமிழக அரசின் ரூ.2 லட்சம் உதவித்தொகை.. விண்ணப்பங்கள் வரவேற்பு – மாவட்ட ஆட்சியர் அறிக்கை!
இந்தியாவில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் தமிழகத்தை சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெற விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
உதவித்தொகை:
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ மாணவிகளுக்கு அரசு ரூ. 2 லட்சம் வரை உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகை பெற தகுதியாக மாணவர்களின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ.2 லட்சத்து 50ஆயிரமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் இந்த உதவித்தொகை பெற விருப்பமுள்ள மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். அல்லது https://bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்திருத்த மசோதாவால் வெடித்த போராட்டக்களம் – நாளை (நவ.24) மின்துறை ஊழியர்கள் பேரணி!!
Exams Daily Mobile App Download
மேலும் பதிவிறக்கம் செய்த விண்ணப்பங்களை மாணவ மாணவிகள் அவர்களின் கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின் மாணவ மாணவிகளின் கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பங்களை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு, 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.