தமிழகத்தில் ஆட்டோ, டாக்சிகள் இயங்க அனுமதி – ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்முறை சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதில் வாடகை ஆட்டோக்கள், கார்கள் (டாக்சி) மட்டும் இயங்க அரசு அனுமதித்துள்ளது.
வாடகை ஆட்டோக்கள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாநிலம் மே 10 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் நோய்த்தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வந்தது. மக்களும் விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை. அதனால் அரசு தளர்வில்லா முழு ஊரடங்கை நீட்டித்தது. காய்கறி, மளிகை போன்ற பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இயங்க அரசு தடை விதித்தது. கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தியது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க அனுமதி? அரசு மறுப்பு!
தற்போது உள்ள ஊரடங்கு ஜூன் 7ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் மேலும் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 14 ம் தேதி வரை 7 நாட்களுக்கு இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும் நோய் பரவல் குறைவாக உள்ள பகுதிகளுக்கு மட்டும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் ஊரடங்கால் மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து சிரமப்படுகின்றனர். வேலைகளை இழந்து வீடுகளில் முடங்கியுள்ளனர். தினக்கூலிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதனை கருத்திற்கொண்டு அரசு வாடகை ஆட்டோக்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ஜூன் 7 முதல் வாடகைக்கு ஆட்டோக்கள், கார்கள் எடுத்து ஓட்டும் ஓட்டுனர்கள் தங்கள் தொழிலை தொடங்கலாம் என தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில் தளர்வுகளை வழங்கவும் மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளது. வாடகை கார்கள், ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல வேண்டும். மேலும் வாடகை டாக்சிகளில் ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.