தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க அனுமதி? அரசு மறுப்பு!
தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மதுக்கடைகள் செயல்படுவதற்கான தடைகள் நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுக்கடைகள் அடைப்பு:
கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளாக மாநிலம் முழுவதும் மே மாதம் 10 ஆம் தேதி முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு ஜூன் 7 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜூன் 7 காலை 6 மணியுடன் ஊரடங்கு உத்தரவானது முடிவடையும் நிலையில், கட்டுப்பாடுகளை மேலும் நீட்டிப்பது குறித்து அரசு ஆலோசனை செய்து வந்தது.
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் ஜூன் 7 முதல் எதற்கெல்லாம் அனுமதி? முழு விபரங்கள் இதோ!
தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பரவல் வீதமானது சில மாவட்டங்களில் மட்டும் உயர்ந்து வந்ததால், மருத்துவர்களின் வலியுறுத்தலின் அடிப்படையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை சில தளர்வுகளுடன் நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன் படி ஜுன் 14 வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், மதுக்கடைகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மே 10 முதல் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு காலத்தில் இருந்து மதுக்கடைகள் செயல்படுவதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. அதே போல ஜூன் 14 வரை அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்திலும் மதுக்கடைகளுக்கான தடை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Poda velakennai