தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட அனுமதி – அரசு உத்தரவு!!
தமிழகத்தில் வரும் ஜூன் 14ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தொற்று பாதிப்புகள் அதிகரித்து வந்தததால் ஜூன் 7ம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் உள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க அனுமதி? அரசு மறுப்பு!
தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிப்புக்கு பின்னர் கடந்த வாரத்தில் இருந்து தொற்று பாதிப்புகள் குறைந்து வருகிறது. கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் மட்டும் பாதிப்புகள் அதிக அளவில் பதிவாகி வருகிறது. இதனால் தமிழகத்தில் ஜூன் 14ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஊரடங்கு நாட்களில் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படவும் அரசு அனுமதி அளித்துள்ளது. தினசரி 50 டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு பத்திரப்பதிவுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.