தமிழக அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி உயர்வு ஓய்வூதியதாரர்களில் யாருக்கெல்லாம் பொருந்தும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு உத்தரவு
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வை அரசு அறிவித்துள்ளது. இந்த உயர்வானது ஓய்வூதியதாரர்களில் யாருக்கெல்லாம் பொருந்தும் என்பது குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதில் அரசு ஓய்வூதியதாரர்கள், அரசு உதவி பெறும் மற்றும் உள்ளாட்சி மன்ற கல்வி நிறுவனங்களின் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள், உள்ளாட்சி மன்றங்களின் ஏனைய ஓய்வூதியதாரர்கள், பொதுத்துறை, தன்னாட்சி நிறுவனம், உள்ளாட்சி அமைப்பு, கூட்டுறவு நிறுவனம் ஆகியவற்றில் தகுதி உடைய அரசுப் பணியாளர்களுக்கு கிடைக்கும்.
தமிழக போலீசில் ரிப்போர்ட்டர் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.1,14,800/- || உடனே விண்ணப்பியுங்கள்!
மேலும் தமிழ்நாடு சிறப்பு விதிகளின் கீழ் சிறப்பு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு கிடைக்கும். அது மட்டுமில்லாமல் அகவிலைப்படிக்கான பட்டியல் சமர்ப்பிப்பது தொடர்பாக கருவூல அலுவலர்கள், உதவி கருவூல அலுவலர்கள், ஓய்வூதியம் வழங்கும் அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்க கருவூல கணக்கு துறை ஆணையர் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.