தமிழகத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழக்கறிஞர் அலுவலக வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழகத்தில் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய கல்வி, வயது வரம்பு உள்ளிட்ட தகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றனர். இதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாடு தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதையடுத்து இப்பணிக்கு விண்ணப்பிக்க 01.07.2022 அன்று நிலவரப்படி குறைந்தபட்சமாக 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும்.
மேலும் BC, MBC, DC உள்ளிட்ட பிரிவினருக்கு 2 ஆண்டுகளும் அத்துடன் SC,ST உள்ளிட்ட பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பள்ளிகளில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இதையடுத்து விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு உள்ளிட்ட தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://drive.google.com/file/