தமிழக அரசு கல்லூரிகளில் ரூ.20000 தொகுப்பூதியத்துடன் 2423 விரிவுரையாளர்கள் நியமனம் – அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் உள்ளிட்ட கல்லூரிகளில் வரும் கல்வியாண்டில் 4000க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்து கொள்ளலாம் என்று உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் சரிவர இயங்கவில்லை. அத்துடன் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர், இணை பேராசிரியர் காலிப்பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளது. இதையடுத்து தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து வழக்கம் போல பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றனர். இதையடுத்து தற்போது தமிழகத்தில் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் உள்ளிட்ட கல்லூரிகளில் 4000க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
ICICI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் உயர்வு!
அதனால் கற்பித்தல் பணியில் பாதிப்பு ஏற்படும் என்பதால் இதனை சரி செய்ய அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களை நியமித்து கொள்ளலாம் என்று உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் இவர் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் காலியாக உள்ள அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை 2,423 கவுரவ விரிவுரையாளர்களை கொண்டு நியமித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
மேலும் இவர்கள் யுஜிசியின் விதிமுறைகளின்படி பணியில் நியமிக்கப்பட வேண்டும். அத்துடன் நியமிக்கப்படும் கவுரவ விரிவுரையாளர்கள், நிரந்தர பேராசிரியர்கள் பணியில் சேரும் வரையிலோ அல்லது கல்வி ஆண்டின் இறுதி வரையிலோ பணியில் தொடருவார்கள் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதந்தோறும் ரூ.20000 வரை வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 53.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.