தமிழகத்தில் பொங்கலுக்கு ரேஷன் கார்டு தாரர்களுக்கு பணப்பரிசு – உணவுத் துறை செயலாளர் முக்கிய தகவல்!
தமிழக மக்களால் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு வழங்கப்படும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு குறித்து தகவலை தமிழக உணவுத் துறை செயலாளரான ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
பொங்கல் பரிசு:
தை மாதம் முதல் நாளில் தமிழக மக்களால் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலகளவில் உள்ள தமிழ் பேசும் மக்களாலும் பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஏழை எளிய மக்களும் பொங்கல் பண்டிகை கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் அரசு சார்பில் பொங்கல் பரிசு, இலவச வேஷ்டி சேலை மற்றும் ரொக்க பணம் ஆகியவை வழங்கப்படும்
Follow our Instagram for more Latest Updates
ஆனால் கடந்த திமுக ஆட்சியில் ரொக்க பணம் வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக பொங்கல் பரிசில் 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அது மக்களுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் இல்லை. அதனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசுடன் ரொக்க பரிசு வழங்கப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். பொங்கலுக்கு இன்னும் 2 மாதம் மட்டுமே உள்ள நிலையில் அது குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான சூப்பர் சான்ஸ் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் இது குறித்து தமிழக உணவுத் துறை செயலாளரான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறுகையில், முதல்வர் ஸ்டாலின் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக விரைவில் வெளியிடுவார். அதன் பின் தான் பொங்கல் பரிசு குறித்த முழு விவரம் தெரிய வரும் என அவர் தெரிவித்துள்ளார். இதனால் தமிழக மக்கள் முதல்வரின் அறிவிப்பை எதிர்நோக்கி காத்துக்கொண்டுள்ளனர்.