சென்னையில் இன்று அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்றநிலையில், ஒரே நாளில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. விலை குறைந்ததால் நகைப்பிரியர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் பல மடங்காக உயர்ந்து கொண்டே செல்கிறது. தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் தாய்மார்களுக்கு தங்கத்தின் மீதுள்ள ஆசை, மட்டும் குறைய போவதே இல்லை. தங்கத்தில் முதலீடு செய்வதை தான் தாய்மார்களும், இல்லத்தரசிகளும் புத்திசாலித்தனமான திட்டமாக எண்ணுகின்றனர். இந்த கொரோனா காலகட்டத்தில் மட்டுமே தங்கத்தின் விலை பல ஆயிரங்கள் அதிகரித்துவிட்டது. கிட்டத்தட்ட 40 ஆயிரம் வரை தங்கத்தின் விலை உயர்ந்துவிட்டது.
தீவிரமடையும் கொரோனா, அமலாகும் ஊரடங்கு – மருத்துவ குழுவை அனுப்பிய சீன அரசு!
தற்போது உக்ரைனை உலுக்கி கொண்டிருக்கும் ரஷ்ய போரால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்தும் குறைந்துமாய் இருக்கிறது. இதனால் அந்நாட்டில் ஏற்றுமதி இறக்குமதி என அனைத்துமே பாதிப்படைந்து பங்கு சந்தை நிலவரங்களும் சரிந்துள்ளது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 38,600 ரூபாய்க்கு விற்பனையாகி கொண்டிருந்தது. அதேபோல சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 71.30 ரூபாய்க்கு விற்பனையானது.
தற்போது ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.38,480-க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,810-க்கு விற்பனையாகி வருகிறது. இதேபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.71.60-க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.