TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
தமிழகத்தில் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் நாள்தோறும் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மாதிரி தேர்வுகள் மூலம் தேர்வர்கள் அனைத்து போட்டி தேர்வுகளிலும் வெற்றி பெறலாம்.
ஆன்லைன் மாதிரி தேர்வு:
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள பணியிடங்களை போட்டி தேர்வுகள் மூலம் TNPSC நிரப்பி வருகிறது. TNPSC யால் குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 3, குரூப் 4 ஆகிய தேர்வுகள் நடத்தப்படுகிறது. குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்த தேர்வு வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. குரூப்2, குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி முடிந்துவிட்டது. இந்த தேர்வுக்கு 11 லட்சம் பேர் விண்ணப்பித்ததாக TNPSC தலைவர் தெரிவித்து உள்ளார். மேலும் 2022 ஆம் ஆண்டு தேர்வு கால அட்டவணையில் (Annual Planner) குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பானது, மார்ச் 2022-இல் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதன்படி TNPSC 7,382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள குரூப் 4 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் ஜூலை 24-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. குரூப் 4 தேர்வுக்கு நாளை முதல் ஏப்.28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். குரூப் 4 தேர்வு இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட 7 பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. TNPSC தேர்வுகளில் குரூப் 4 தேர்வு மட்டும் லட்சக்கணக்கானோர் எழுதி வருகின்றனர். இந்த குரூப் 4 தேர்வு அதிக அளவிலானோர் எழுத முக்கிய காரணம் கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஒரே ஒரு எழுத்துத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறுவது ஆகும்.
இந்த நிலையில் அனைத்து தேர்வுகளுக்கும் நடப்பு நிகழ்வுகள் பாடத்திட்டத்தில் முக்கிய பகுதியாக உள்ளது. எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கும் ஆன்லைன் மூலம் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன்படி TNPSC தேர்வுகளுக்கான முந்தைய ஆண்டு தேர்வில் கேட்கப்பட்டுள்ள வினாக்களில் இருந்து தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் TNPSC தேர்வுக்கான பொதுத்தமிழ் உரைநடை கேள்விகளை கொண்ட மாதிரி தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெற உள்ளது. இதை தேர்வர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.