தீவிரமடையும் கொரோனா, அமலாகும் ஊரடங்கு – மருத்துவ குழுவை அனுப்பிய சீன அரசு!
தற்போது 26 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஷாங்காய் நகரத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரிசோதனைக்காக சீனா அரசாங்கம் ராணுவம் மற்றும் மருத்துவர்களை அந்நகரத்திற்கு அனுப்பி இருக்கிறது.
கொரோனா பரிசோதனை
கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதிய கொரோனா பாதிப்புகளை பதிவு செய்து வரும் சீனா நகரங்கள் தற்போது முழுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்குள் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சீனாவின் ஷாங்காய் நகரத்தில் உள்ள சுமார் 26 மில்லியன் குடியிருப்பாளர்கள் இப்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்குள் இருக்கின்றனர். இப்போது அந்நகரில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு உதவியாக இராணுவத்தையும், ஆயிரக்கணக்கான சுகாதாரப் பணியாளர்களையும் சீன அரசாங்கம் ஷாங்காய்க்கு அனுப்பி இருக்கிறது.
ESIC நிறுவனத்தில் ரூ.1,42,400 மாத சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க 12ம் தேதி கடைசி நாள்!
அந்த வகையில் மக்கள் விடுதலை இராணுவம், கடற்படை மற்றும் கூட்டு தளவாட ஆதரவுப் படைகளில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களை சீன அரசு, ஷாங்காய்க்கு அனுப்பியதாக ஒரு ஆயுதப்படை செய்தித்தாள் தெரிவித்துள்ளது. அதே போல ஜியாங்சு, ஜெஜியாங் மற்றும் பெய்ஜிங் போன்ற பல மாகாணங்களும் சுகாதாரப் பணியாளர்களை ஷாங்காய்க்கு அனுப்பியுள்ளன. இது தொடர்பான ஊடக அறிக்கைகளின்படி, மொத்த சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை 10,000க்கும் அதிகமாக உள்ளது.
மத்திய அரசின் PM KISAN 11வது தவணைத்தொகை ரூ.2000 – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இதற்கிடையில் கடந்த வாரத்தில் இரண்டு கட்ட பூட்டுதலை தொடங்கிய ஷாங்காய் நகரம், இக்கட்டுப்பாடுகளை தற்போது விரிவுபடுத்தியது. இப்போது கூட்ட நெரிசல் மற்றும் சுகாதாரமற்ற மத்திய தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள், உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய மருத்துவ உதவிகளைப் பாதுகாப்பதில் உள்ள சிரமங்களை சந்தித்து வருவதாக பொது மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் சீனாவில் உள்ள சில நகரங்களில் நியூக்ளிக் அமில சோதனையை மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் துவங்கி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.