தமிழக அரசு வழங்கும் 69% இடஒதுக்கீடு குறித்த வழக்கு – 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு!!

0
தமிழக அரசு வழங்கும் 69% இடஒதுக்கீடு குறித்த வழக்கு - 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு!!தமிழக அரசு வழங்கும் 69% இடஒதுக்கீடு குறித்த வழக்கு - 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு!!
தமிழக அரசு வழங்கும் 69% இடஒதுக்கீடு குறித்த வழக்கு - 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு!!
தமிழக அரசு வழங்கும் 69% இடஒதுக்கீடு குறித்த வழக்கு – 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு!!

தமிழகத்தில் அரசு பணிகள் மற்றும் மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் 69% இடஒதுக்கீடு திட்டத்தை எதிர்த்து கல்லூரி மாணவி சார்பில் தொங்கப்பட்ட வழக்கு குறித்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்று 2 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

இடஒதுக்கீடு மனு:

தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு மூலம் அரசு பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை வழங்கப்படுவதால் பொது பிரிவு மாணவர்களுக்கு அரசு பணி கிடைப்பதில் பாதிப்பு ஏற்படுவதாக மாணவி காயத்ரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தொடர்ந்த மனுவில் குறிப்பிட்டுள்ளவை, “ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அரசு பணிகளிலும், கல்லூரி மாணவர் சேர்க்கையிலும் 69% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

தமிழக வனக்காப்பாளர் பணிகளுக்கான காலியிடங்கள் – 230 பேர் தகுதியின்றி நிராகரிப்பு!!!

இந்த திட்டத்தின்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30 சதவிகிதம், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவிகிதமும், பட்டியலினத்தவர்களுக்கு 18 சதவிகிதமும், பழங்குடியினருக்கு 1 சதவிகிதமும் இடஒதுக்கீடு வழங்கபடுகிறது. இதன் காரணமாக பொதுப்பிரிவு மாணவர்களுக்கு அரசு பணிகளில் இடம் இல்லாத நிலை உள்ளது. ஏற்கனவே உச்சநீதி மன்றத்தில் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்திரா ஷானே வழக்கில் 50% க்கு மேல் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என தீர்ப்பு வழங்கியது.

தமிழக அரசின் இந்த திட்டம் 1993 ஆம் ஆண்டு கொண்டுவந்த இந்திரா ஷானே வழக்கில் அளித்த தீர்ப்பு போல் இல்லாத காரணத்தால் இது அரசியலைப்பு சட்டத்தின் படி செல்லாது என அறிவிக்க வேண்டும். இந்திய அரசியலைப்பில் அனைவரும் சமம் என்ற கோட்பாடு மீறப்படுகிறது.

தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுமா?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

எனவே இந்த திட்டத்தை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். மேலும் மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில் இடங்களை அதிகரிப்பது குறித்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அனுமதி பெறாமல் இருப்பதால் பொதுப்பிரிவினர் பாதிக்கப்படுகின்றனர்” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அசோக் பூஷன், இந்த மனு குறித்து தமிழக அரசு 2 வாரங்களில் தீர்ப்பளிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!