விமான டிக்கெட் பல மடங்கு உயர்வு.. காரணம் இதுவா? – ஷாக்கில் பயணிகள்!

0

விமான டிக்கெட் பல மடங்கு உயர்வு.. காரணம் இதுவா? – ஷாக்கில் பயணிகள்!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

விமான கட்டணம்

தமிழக பள்ளிகளுக்கு நடப்பு கல்வியாண்டு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால் பலர் சுற்றுலா தலங்களுக்கு செல்ல திட்டமிடுகின்றனர். பேருந்துகளிலும், ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்ட நிலையில், பலர் விமானங்களில் பயணம் செய்ய இருக்கின்றனர். அதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

இவர்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுப்பா? – மாவட்ட தேர்தல் அலுவலர் விளக்கம்!

எனவே விமான டிக்கெட் விலையும் அதிகரித்துள்ளது. அதன் படி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்ல விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,957ல் இருந்து ரூ.12,716-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மதுரை விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,674-ல் இருந்து ரூ.8555-ஆகவும், சென்னையில் இருந்து மதுரைக்கு அதிகபட்சமாக விமான டிக்கெட் ரூ.11,531-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை – சேலம் இடையே ரூ.2,433ஆக இருந்த விமான டிக்கெட் கட்டணம் ரூ.5572-ஆக அதிகரித்துள்ளது. சென்னை – கோவை விமான டிக்கெட் கட்டணம் ரூ.3342-ல் இருந்து ரூ.8616-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் நாளை வாக்குப்பதிவு நாள் என்பதால் பலர் வெளி ஊர்களுக்கு வாக்களிக்க செல்வார்கள் அதனாலும் டிக்கெட் விலை உயர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!