தமிழக மின்வாரிய கேங்மேன் பணியிட நியமனத்தில் முறைகேடு – ஒப்பந்த தொழிலாளர்கள் புகார்!!
தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 9613 கேங்மேன் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்ட நிலையில் அதில் முறைகேடுகள் உள்ளதாக 5 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கேங்மேன் பணியிடங்கள்:
தமிழக மின்சார வாரியத்தில் 9613 கேங்மேன் காலியிடங்களுக்கான பணி நியமன ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பணி நியமன ஆணையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக 5 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 100க்கு மேற்பட்ட ஊழியர்கள் முதல்வர் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தமிழக மின்சார வாரியத்தில் 15,000 கேங்மேன் பணியிடங்கள் இருந்தன. அதில் 10,000 பணியிடங்கள் மட்டுமே பணிநியமனம் வழங்கப்பட்டது. இந்நிலையில் 5 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் எங்களை அரசு புறக்கணித்ததாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மீதமுள்ள 5000 பணியிடங்களில் எங்களை கொண்டு நிரப்ப வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு முறையை எதிர்த்து வழக்கு – பதில்மனு தாக்கல்!!
மின்சார வாரியத்தில் மின்கம்பம், மின்கம்பிகள் அமைக்கும் கடினமான வேலைகளில் எங்களை பயனப்டுத்தி கொண்டு புதிய ஊழியர்கள் நிரந்தரமாக தேர்வு செய்யப்பட்டதே, இந்த போராட்டத்திற்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. தமிழக முதல்வர் இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்