தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு முறையை எதிர்த்து வழக்கு – பதில்மனு தாக்கல்!!
தமிழகத்தில் உள்ள அரசு பணி மற்றும் மாணவர் சேர்க்கைக்கு பின்தங்கிய மாணவர்களின் முன்னேற்றத்திற்காக 69% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
மாணவர்களுக்கான இடஒதுக்கீடு அறிவிப்பு:
தமிழக மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் மாணவர் சேர்க்கைகளின் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 69% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையை சேர்ந்த தினேஷ் என்ற மாணவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதில் மருத்துவ கலந்தாய்வு, பொறியியல் படிப்பு உட்பட படிப்புகளில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் 69% வழங்கப்பட உள்ளதால் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
TN Job “FB Group” Join Now
எனவே அந்த இடஒதுக்கீடு அளவு 50 சதவிகிதமாக மாற்ற வேண்டும் என அவர் கூறினார். இந்த வழக்கு குறித்து மத்திய அரசு மற்றும் தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தமிழக அரசின் தனிப்பட்ட முடிவு எனவும், அதில் மத்திய அரசு தலையிட முடியாது எனவும் கூறியது. இந்நிலையில் நேற்று தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் – பிப்ரவரி 27 கடைசி நாள்!!
அதில் தமிழகத்தில் உள்ள மாணவர்களில் பெருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு ஜாதி வாரியாக கணக்கெடுத்த பின்பு தான் 69 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அந்த சலுகைக்கு குடியரசு தலைவரும் அனுமதி வழங்கியுள்ளார். குறிப்பாக பின்தங்கிய சமுதாய மாணவர்களை முன்னேற்றும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனால் இந்த வழக்கு குறித்த அனைத்து மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்