தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகளுக்கு விடுமுறை – ஆன்லைன் வகுப்புகள் தொடரும்!!

1
தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆன்லைன் வகுப்புகள் தொடரும்!!
தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆன்லைன் வகுப்புகள் தொடரும்!!
தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகளுக்கு விடுமுறை – ஆன்லைன் வகுப்புகள் தொடரும்!!

தமிழகத்தில் அதிகமாக பரவி வரும் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் இன்று முதல் விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கல்லூரிகளுக்கு விடுமுறை:

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவல் மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிப்படைய செய்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். முதற்கட்டமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன்பின் வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்த காரணமாக நாடு முழுவதும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.

TN Job “FB  Group” Join Now

கல்லூரிகள் இறுதியாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதியும், மற்ற ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதியும் திறக்கப்பட்டன. அதனை தொடர்ந்து பள்ளிகளில் உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு 2 மாதங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். மேலும் நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பரவி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் 4,512 வேட்புமனுக்கள் – தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

இதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடு விதிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக பள்ளிகளில் மார்ச் 22ம் தேதி முதல் 12ஆம் வகுப்பு தவிர அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்படக் கூடாது எனவும் ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தலாம் என தமிழக அரசு கடந்த 20 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் – இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மாநிலங்கள்!!

அதனை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை பரிசீலனை செய்த தமிழக அரசு கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட கூடாது எனவும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் கல்லூரிகள் விடுமுறை வழங்கப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  மேலும் செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் முறையிலேயே நடைபெறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!