தமிழக சட்டமன்ற தேர்தலில் 4,512 வேட்புமனுக்கள் – தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 7,255 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதில் 4,512 மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல்:
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையமும், தேர்தலில் போட்டியிடும் கட்சியினரும் தீவிரம் காட்டி வருகின்றனர். தேர்தல் அறிக்கை, தேர்தல் பிரச்சாரம், தேர்தல் வேட்புமனு தாக்கல் என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
தமிழகத்தில் மொத்தம் 6.29 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் 3.09 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 3.19 கோடி பேர் வாக்காளர்கள், மற்றும் திருநங்கைகள் 7,192 பேர் உள்ளனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 7,255 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 4,512 மனுக்கள் மட்டுமே தகுதி உள்ளதாக ஏற்கப்பட்டுள்ளது. 2,743 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் – இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மாநிலங்கள்!!
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசு அலுவலங்களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. தேர்தலில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க போக்குவரத்து துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை ரூ.231.63 கோடி பணம், பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.83.99 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முக்கிய அறிவிப்பு – மாணவர்களுக்கு ஜாக்பாட்!!
தபால் முறையில் வாக்களிக்க இதுவரை 1.49 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் தேர்தல் பணிகளில் ஈடுபட மாற்று திறனாளிகளுக்கு விலக்கு வழங்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வாகனங்கள் மூலம் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தமிழகம் முழுவதும் 14,071 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதில் இதுவரை 6,598 பேருக்கு பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.