நாடு முழுவதும் கொரோனா தாக்கம் – இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மாநிலங்கள்!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலை தாக்கம்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. நேற்று ஒருநாள் மட்டும் இந்தியாவில் கொரோனா தாக்கம் 40000 மேற்பட்டவர்களுக்கு அதிகமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் 17000யை கடந்து உள்ளது. நாடு முழுவதும் உள்ள கொரோனா தாக்கத்தில் 77 சதவிகிதாமாக உள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் தமிழகம், கேரளா, மஹாராஷ்டிரா,பஞ்சாப், ஹரியானா, கர்நாடகா மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சில மாநிலங்களில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.சில மாநிலங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, பகல் நேரக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவைகள் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளன.
சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முக்கிய அறிவிப்பு – மாணவர்களுக்கு ஜாக்பாட்!!
மகாராஷ்டிரா:
மகாராஷ்டிரா மாநிலம் தான் கொரோனா பரவலில் முதல் இடத்தில் உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிராவில் உள்ள 10 மாவட்டங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் பட்டியல் – நாளை வெளியீடு!!
பஞ்சாப்:
பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருவதால் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
குஜராத்:
குஜராத் மாநிலத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு பொதுநிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் வண்ணப்பொடிகளை பூசவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடருமா?? – உயர்கல்வித்துறை செயலாளர் ஆலோனை!!!
மத்திய பிரதேசம்:
மத்திய பிரதேசத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிறு கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகம் உள்ள 3 மாவட்டங்களில் முழு ஒரு நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ராஜஸ்தான்:
ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க 8 நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இரவு 10 மணிக்கு மேல் செயல்படும் சந்தைகள் அனைத்தும் மூடப்படும்.
கல்விக்கட்டணம் கேட்டு தனியார் பள்ளிகள் கெடுபிடி – பெற்றோர்கள் வருத்தம்!!
கோவா:
கோவா மாநிலத்தில் ஹோட்டல்கள், பொழுது போக்கு நிகழ்வு இடங்களில் கொரோனா கால கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனா தாக்கம் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. பிற வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக சத்தீஸ்கர் அரசு அறிவித்துள்ளது. 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தமான் தீவு:
அந்தமான் தீவு பகுதிகளில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.