தமிழக மக்களை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல இதை செய்ய வேண்டும்- அரசு அலுவலர்களுக்கு முதல்வரின் அறிவுரை!
தமிழகத்தில் மக்கள் நலனுக்காக பல திட்டங்களை அரசு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், தமிழ்நாட்டு மக்களை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அரசுடன், அரசு உயர் அலுவலர்கள் துணை நிற்க வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் வைத்துள்ளார். மேலும் அரசு அலுவலர்களுக்கு அவர் அறிவுரை ஒன்றை வழங்கி இருக்கிறார்.
முதல்வர் உரை
தமிழகத்தில் அரசின் முன்னுரிமை திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற்றது. அதில் அவர் அரசு அலுவலர்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கி இருக்கிறார். அதில் எந்த துறையின் திட்டமாக இருந்தாலும் அது மக்களை மேம்படுத்த தான் அமைக்கப்பட்டுள்ளது. உலகளவில் சிறந்து விளங்கும் பல திட்டங்களை தீட்டி வருகிறோம். இந்த திட்டங்களை சரியான முறையில் செயல்படுத்தினால், தமிழ்நாடு இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவில் சிறந்து விளங்கும்.
தமிழகத்தில் ஏப்.06 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – மார்ச். 17 ஹால் டிக்கெட் வெளியீடு!
மேலும் அரசு அலுவலர்கள் திட்டத்தை தொடங்கும் போது கொடுக்கிற ஆர்வம், அதனை நிறைவேற்றி முடிப்பது வரை இருக்க வேண்டும். அதற்குத்தான் இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்களை நாம் தொடர்ந்து நடத்தி வருவதாக தெரிவித்தார். இதற்காக கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம் என்ற திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அரசு துறை அலுவலர்களின் பணியினை ஆய்வு செய்வதோடு மட்டுமல்லாமல், மாதந்தோறும் குறைந்தபட்சம் இரண்டு மாவட்டங்களுக்குச் சென்று கள ஆய்வு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download