தமிழகத்தில் ஏப்.06 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – மார்ச். 17 ஹால் டிக்கெட் வெளியீடு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்.06ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த நிலையில் மார்ச் 17ம் தேதி முதல் தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்படவுள்ளது. இதனை தேர்வர்கள் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஹால் டிக்கெட்:
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 2022 – 2023 ஆம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த தேர்வானது ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக ஏப். 06ம் தேதி மொழிப்பாடத் தேர்வு நடைபெறவுள்ளது.
TNPSC 2023 தேர்வில் நீங்கள் ஜெயிக்க – Best Online Class! Weekend Batch துவக்கம்!
அடுத்தாக ஏப். 10ம் தேதி ஆங்கிலம், ஏப். 13 கணக்கு, ஏப். 15 விருப்ப மொழிப்பாடம், ஏப். 17 அறிவியல் ஏப். 20 சமூக அறிவியல் என அடுத்த தேர்வுகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைபெறவுள்ளது. நடப்பு ஆண்டு மாணவர்களின் விருப்பத்தின் பேரில் தாய்மொழியில் மொழிபாடத்தேர்வை எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்த தேர்வில் பங்கேற்கவுள்ள தனித்தேர்வர்களின் ஹால்டிக்கெட் மார்ச் 17ம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அரசு தேர்வுகள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download