தமிழகத்தில் மே 19ம் தேதி சட்டப்பேரவை குழு கூட்டம் – கொரோனா தடுப்பு ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கலந்தாலோசிக்க அனைத்து கட்சி உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவை கூட்டம் மே 18ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
சட்டப்பேரவை குழு கூட்டம் :
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. அரசு நோய் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் அரசு முன்னெச்சரிக்கையாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைந்த அரசு 14 நாட்களுக்கு சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதனால் தமிழகத்தில் கடைகள் அனைத்திற்கும் நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் குறையும் கொரோனா பாதிப்பு – உயரும் பலி எண்ணிக்கை!!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு பணிகளை செய்து வருகிறார். மேலும் தடுப்பு நடவடிக்கைள் குறித்து கலந்தாலோசிக்க அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்து அவர்கள் தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து கட்சி சார்பில் உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
அந்த குழுவின் முதல் கூட்டம் மே 19ம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில், தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ளது. நாட்டிலேயே அனைத்து கட்சிகளில் இருந்தும் உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவை குழு அமைக்கப்பட்டது, தமிழகத்தில் தான். இதில் 13 கட்சிகளின் உறுப்பினர்கள் இருப்பது குறிப்படத்தக்கது. இக்குழு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், அடுத்த கட்ட பணிகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளது.