நாடு முழுவதும் குறையும் கொரோனா பாதிப்பு – உயரும் பலி எண்ணிக்கை!!
நாடு முழுவதும் புதிதாக கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கொரோனா பரவலை குறைக்கும் நோக்கில் கடந்த வருட மார்ச் மாதத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வந்தது. ஆண்டு இறுதியில் கொரோனா நோய்த்தொற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசுகளே நிலைமையை பொறுத்து அமல்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் நாட்டில் கொரோனா 2வது அலை வேகமெடுக்க தொடங்கி உள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சில நாட்களுக்கு முன்னர் தினசரி 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. தற்போது கொரோனா புதிய பாதிப்புகள் குறைய தொடங்கி 3 லட்சத்திற்கும் கீழ் சென்றுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 2,63,533 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தின் 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் – அரசு உத்தரவு!!
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,52,28,996 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,329 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே மொத்த பலி எண்ணிக்கை 2,78,719 ஆக அதிகரித்துள்ளது. 4,22,436 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 2,15,96,512 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதித்து மருத்துவமனைகளில் 33,53,765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் 18,44,53,149 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.