தமிழகத்தின் 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் – அரசு உத்தரவு!!
தமிழகத்தில் மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்:
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அதே போல ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் மாற்றப்பட்டு ககன் தீப் சிங் பேடி தற்போது புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் மறுகாவல் நிலைய எல்லைக்குள் செல்ல இ-பதிவு கட்டாயம் – காவல்துறை அறிவிப்பு!!
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 5 பெரிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் மாற்றப்பட்டு உள்ளதாக தலைமை செயலாளர் இறையன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பும், மாற்றப்பட்ட ஆட்சியர்களின் விவரங்கள் குறித்து விளக்கமாக கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியாராக பணியாற்றி வந்த அன்பழகன் மாற்றப்பட்டு மாநில தொழில்கள் ஊக்குவிப்பு கழக நிர்வாக இயக்குனர் பதவி வகிக்கும் அனீஷ் சேகர் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ராமன் மாற்றப்பட்டு, சமூக நலம் மற்றும் சத்துணவு துறை இணைச் செயலர் கார்மேகம் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த சேகர் சக்கமுரிக்கு மாற்றப்பட்டு, தமிழ்நாடு மாநில ஆணைய செயலர் பாலசுப்பிரமணியன் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
TN Job “FB
Group” Join Now
திருச்சி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த திவ்யதர்ஷினி மாற்றப்பட்டு, தொழில் மற்றும் வணிக வரித்துறை கூடுதல் ஆணையராக பதவி வகிக்கும் சிவராசு புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா மாற்றப்பட்டு, திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி புதிய மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.